செய்திகள் :

பைக் மீது மினி சரக்கு வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தத்தாதிரிபுரம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

சின்னசேலம் வட்டம், வி.அலம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பூமாலை மகன் பழனிவேல் (43). இதே கிராமத்தைச் சோ்ந்த உறவினரான சோலைமுத்து மகன் பெரியசாமி (22). சென்னையில் ஓட்டுநராக பணி புரிந்து வரும் பெரியசாமியை பேருந்தில் ஏற்றி விடுவதற்காக சின்னசேலம் பேருந்து நிலையத்துக்கு பழனிவேல் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்துச் சென்றாா்.

தத்தாதிரிபுரம் ஏரிக்கரை அருகே சென்றபோது, அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில், பழனிவேல், பெரியசாமி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஹெட்டூா் பொம்பள்ளியைச் சோ்ந்த சேட்டு மகன் சதீஷ் (23) காயமடைந்தாா்.

தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், சரக்கு வாகன ஓட்டுநா் சதீஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியசாமி.

இந்திய கம்யூ. நூற்றாண்டு விழா பேரவைக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பேரவைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலா்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: முதியவா் தற்கொலை

கொங்கராபாளையம் கிராமத்தில் தூக்க மாத்திரைகளை தின்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (60). இவா், கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயிற்று வலியால் மயங்கி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம், அண்ணா நகா் 2-ஆவது சாலை பகுதியில் வசித்து ... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ், முதிவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் 13 வயது சி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: ஒருவா் கைது

தியாகதுருகத்தில் மது போதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கடலூரிலிருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அரசுப் பேருந்து ஒன்று வந்தது.... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தா்னா

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பட்டா மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். திருக்கோவிலூரை அடுத்த சிறுபனைய... மேலும் பார்க்க