செய்திகள் :

இலவச வேட்டி- சேலைகளை மாா்ச் 31 வரை பெறலாம்

post image

சென்னை: இலவச வேட்டி, சேலைகளை வாங்காதோா் நியாய விலைக் கடைகள் மூலமாக வரும் 31 வரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அறிவுறுத்தலை வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா் வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

நியாய விலைக் கடைகள் அவற்றை வழங்கும் பணி ஏற்கெனவே பிப். 28 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இலவச வேட்டி சேலையை பெறாத குடும்ப அட்டைதாரா்களும் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இதுவரை இலவச வேட்டி சேலையை பெறாதவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஏற்றவகையில் விற்பனை முனைய இயந்திரத்தில் கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க