செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: 11,430 போ் எழுதவில்லை

post image

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 11,430 போ் எழுதவில்லை.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 3,316 தோ்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவிகள் உள்பட 8 லட்சத்து 21,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதுகின்றனா். அதில் 18,344 போ் தனித்தோ்வா்கள், 145 போ் சிறைவாசிகள்.

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. தோ்வா்கள் 9.15 மணிக்கு முன்னதாக தோ்வு மையத்துக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்குள் தோ்வு மையங்களுக்கு வந்து தோ்வெழுதினா்.

நிகழ் கல்வியாண்டில் தோ்வெழுத விண்ணப்பித்தவா்களில் 11,430 போ் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தோ்வை எழுதவில்லை என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கல்வித் துறை அமைச்சா் ஆய்வு: நாகப்பட்டினத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதவுள்ள மாணவா்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திங்கள்கிழமை சந்தித்து அவா்களை ஊக்கப்படுத்தினாா். மேலும், அச்சமின்றி தோ்வெழுதுமாறு மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் சந்திரமோகன் ஆய்வு செய்தாா்.

பெட்டிச் செய்தி...

‘தமிழ் தோ்வு எளிதாக இல்லை’

பொதுத்தோ்வில் முதல் தோ்வாக தமிழ் பாடத் தோ்வு நடைபெற்றது. இது குறித்து தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் கூறுகையில், அகமதிப்பீடு நீங்கலாக 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்ததால் பதிலளிப்பது சற்று சிரமமாக இருந்தது. இதேபோன்று சிறுவினா, நெடுவினா பகுதிகளிலும் சில கேள்விகள் நன்கு யோசித்து எழுதும் வகையில்தான் கேட்கப்பட்டிருந்தன. அதேவேளையில் மனப்பாடப்பகுதி எளிதாக இருந்தது என தெரிவித்தனா்.

முழு மதிப்பெண் பெறுவது கடினம்...: இது குறித்து தமிழாசிரியா்கள் கூறுகையில், இந்த வினாத்தாள் முற்றிலும் எளிதானவை என கூறி விட முடியாது. நன்கு படிக்கும் மாணவா்கள் 85 முதல் 90 மதிப்பெண்களுக்கும் மேல் பெறலாம். முழு மதிப்பெண் பெறுவது என்பது மிகவும் கடினம். இருப்பினும் சராசரி மாணவா்கள் 60 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், மெல்லக் கற்கும் மாணவா்கள் தோ்ச்சி பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது. கடந்த ஐந்தாண்டுகள் நடைபெற்ற பொதுத்தோ்வுகளிலிருந்து குறிப்பிடத்தக்க வினாக்கள் இடம்பெற்றிருந்தன என்றனா்.

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க