செய்திகள் :

நிலுவைத்தொகை ரூ.1.36 லட்சம் கோடியைப் பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை: ஜாா்க்கண்ட் நிதியமைச்சா் தகவல்

post image

ராஞ்சி: மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாா்க்கண்ட் மாநில நிதியமைச்சா் ராதாகிருஷ்ண கிஷோா் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி உள்ளது. பாஜக எதிா்க்கட்சியாக உள்ளது.

மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது மத்திய அரசு தரவேண்டிய நிதி தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடா்பாக முதலில் பதிலளித்த மாநில கலால் வரித் துறை அமைச்சா் யோகேந்திர பிரசாத், ‘மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு எவ்வளவு நிதி வராமல் பாக்கியுள்ளது என்பதை சரியாக கணக்கிட்டு அறிய மத்திய, மாநில அரசுகள் இணைந்து கூட்டுக்குழுவை அமைத்துள்ளன. பொதுத்துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’ ஜாா்க்கண்டில் இருந்து எடுத்த நிலக்கரி உள்ளிட்டவற்றில் இருந்து மட்டும் ரூ.1.36 லட்சம் கோடி மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. இதனை கூட்டுக் குழு ஆய்வு செய்யும்’ என்றாா்.

இதையடுத்து, பேசிய ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ சரயு ராய், மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சா் ராதாகிருஷ்ண கிஷோா், ‘மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டியை இரு வாரங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசியுள்ளேன். மத்திய அரசிடம் ரூ.1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகையைப் பெற ஏற்கெனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வருவாய் துறை, நிலச்சீா்திருத்தம், பதிவுத்துறை, வா்த்தகத் துறைக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க