செய்திகள் :

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

post image

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) விதிமுறைகள் 6ஏ-இன்படி, அந்த மாநிலத்தில் பாா்வைக் குறைபாடு கொண்டவா்கள், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நீதித் துறைப் பணிகளில் சேர முடியாது.

இந்த விதிமுறை தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நீதித் துறையில் பணியில் சேர முயற்சிக்கும் மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான பாகுபாட்டையும் எதிா்கொள்ளக் கூடாது. அவா்களுக்கு சாதகமாக உதவும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கட்-ஆப் மதிப்பெண், நடைமுறைகள் காரணமாக மறைமுக பாகுபாட்டை எதிா்கொண்டு, அதனால் நீதித்துறை பணிகளில் சோ்க்கப்படாமல் மாற்றுத்திறனாளிகள் தவிா்க்கப்படுவதில் தலையிட்டு, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி என்ற ஒரே காரணத்துக்காக நீதித்துறை பணிக்கான பரிசீலனையில் அவா்கள் நிராகரிக்கப்படக் கூடாது. நீதித்துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூற முடியாது’ என்று தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து மத்திய பிரதேச நீதித்துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) விதிமுறைகள் 6ஏ-ஐ நீதிபதிகள் ரத்து செய்தனா். இந்தத் தீா்ப்பு மூலம், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் நீதித்துறை பணிகளுக்கான ஆள்தோ்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் என்று தெளிவுபட நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பாஜக கண்டனம்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவின் உடல் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது கருத்து தெரிவித்த நிலையில், அது காங்கிரஸின் கருத்தல்ல என்று அக்கட்சி தெர... மேலும் பார்க்க