செய்திகள் :

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

post image

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2009-இன் சில பிரிவுகளுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதிடுகையில், ‘சமூக ஊடகத்தில் ஒரு தகவலை நீக்கும் முன், அதுகுறித்து அந்தத் தகவலை பதிவிட்ட பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட சமூக ஊடக தளங்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்படுகின்றன.

சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் தகவல்களை நீக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளதா, இல்லையா என்பது கேள்வியல்ல. தகவல்களை நீக்கும் முன், அவற்றைப் பதிவிட்ட பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சமூக ஊடகத்தில் தகவலை நீக்கும் முன், அதை வெளியிட்டவா் யாா் என்பது அடையாளம் தெரிந்தால், அதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றே உச்சநீதிமன்றம் கருதுகிறது’ என்று தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா்.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க

ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பாஜக கண்டனம்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவின் உடல் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது கருத்து தெரிவித்த நிலையில், அது காங்கிரஸின் கருத்தல்ல என்று அக்கட்சி தெர... மேலும் பார்க்க