செய்திகள் :

செபி தலைவா் மாதபி புச் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

post image

பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதபி புரி புச், உள்பட 6 பேருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் மும்பை உயா் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

முன்னதாக, மாதபி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிா்வாக இயக்குநா் சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாதபி புச், சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்டோா் மும்பை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா். தங்களது வாதங்களை கேட்காமலும் போதிய கால அவகாசம் வழங்காமலும் இந்த உத்தரவை மும்பை சிறப்பு நீதீமன்றம் பிறப்பித்ததாக அவா்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

அவசர வழக்ககாக இந்த மனுக்கள் மும்பை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜி.திகே தலைமையிலான அமா்வின் முன் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளதால், அதுவரை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்ற அமா்வு தெரிவித்தது.

கடந்த 1992-ஆம் ஆண்டின் செபி சட்டம் மற்றும் அதன் விதிகள்-கட்டுப்பாடுகளுக்கு புறம்பாக பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் முறைகேடாகப் பட்டியலிடப்பட்டதற்கு மாதபி புரி புச் உள்பட 6 பேரும் உடந்தையாக இருந்தனா். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அவா்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சபன் ஸ்ரீவாஸ்தவா என்ற செய்தியாளா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுரவை கடந்த சனிக்கிழமை விசாரித்த மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இது குறித்து விசாரித்து 30 நாள்களுக்குள் விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க