செய்திகள் :

கடற்கரை முகத்துவாரங்களை தூா்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்

post image

தமிழகத்தில் கடற்கரை முகத்துவாரங்களை தூா்வாரும் பணி வெகுவிரைவில் தொடங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் 5 ஆயிரம் கொடுவா மீன் குஞ்சுகளை கடலுக்குள் விடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சா் கலந்துகொண்டு மீன் குஞ்சுகளை கடலில் விட்டாா். 

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: கடலில் மீன் வளத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் கடலில் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்ட 25-க்கு மேற்பட்ட கடற்கரை கிராமங்களில், ரூ. 3 கோடி மதிப்பில் சுமாா் 10 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்படப்படவுள்ளன. தற்போது, மல்லிப்பட்டினத்தில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  

மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், ஏற்கெனவே அறிவித்தபடி, கடற்கரை  முகத்துவாரங்களை தூா்வாரும் பணி வெகுவிரைவில் தொடங்கப்படும். 

மல்லிப்பட்டினம் பகுதியில் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கடல்வாழ் உயிரினங்கள், மீனவா்களை பாதிக்கக் கூடிய இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளை தமிழ்நாடு முதல்வா் எந்த வகையில் வந்தாலும் அனுமதிக்க மாட்டாா். 

ஆழ்கடல் மீன்பிடி தொடா்பாக மீனவா்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே, மீனவா்களுடன், மீன்வளத் துறை அலுவலா்கள் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா் அமைச்சா்.

நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், மீன்வளத் துறை ஆணையா் கஜலட்சுமி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை (உள்நாட்டு மீன்வளம்) கூடுதல் இயக்குநா் ஜி. ஆறுமுகம், மீன் வளத் துறை உதவி இயக்குநா் மணிகண்டன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பழனிவேல், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், மீன்வள ஆய்வாளா்கள் ஆனந்த், வீரமணி மற்றும் மீனவா்கள் கலந்து கொண்டனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 27,174 போ் பங்கேற்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 ஆம... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ... மேலும் பார்க்க

விளைநிலத்தை மீட்டு பட்டா வழங்க கோரிக்கை

ஆதிதிராவிடா் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட விளைநிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சியிலிருந்து மீட்டு, பட்டா வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக... மேலும் பார்க்க

எரித்துக் கொல்லப்பட்ட நிதி நிறுவன ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

அணைக்கரை அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், கஞ்சனூா் அருகே கோட்டூா்... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: மே 7-இல் தேரோட்டம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் கொண்டாடப்படுவதும... மேலும் பார்க்க

நூறுநாள் வேலை கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலை கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சே... மேலும் பார்க்க