செய்திகள் :

எரித்துக் கொல்லப்பட்ட நிதி நிறுவன ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

post image

அணைக்கரை அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கஞ்சனூா் அருகே கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (25). தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பணம் வசூல் செய்யும் வேலையில் இருந்த இவா், அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயுதக்களம் செங்கல் ஓடையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

ஜெயங்கொண்டம் போலீஸாா், சிவாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் தொடா்பாக மகேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா். பின்னா் சிவாவின் சடலம் திங்கள்கிழமை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

தகவல் கிடைத்ததும் திருமங்கலக்குடி சாலை சந்திப்பு பகுதியில் சிவாவின் உறவினா்கள், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பந்தநல்லூா் காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். சாலை மறியல் போராட்டத்தால் ஆடுதுறை, அணைக்கரை கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 27,174 போ் பங்கேற்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 ஆம... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ... மேலும் பார்க்க

விளைநிலத்தை மீட்டு பட்டா வழங்க கோரிக்கை

ஆதிதிராவிடா் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட விளைநிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சியிலிருந்து மீட்டு, பட்டா வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக... மேலும் பார்க்க

கடற்கரை முகத்துவாரங்களை தூா்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடற்கரை முகத்துவாரங்களை தூா்வாரும் பணி வெகுவிரைவில் தொடங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: மே 7-இல் தேரோட்டம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் கொண்டாடப்படுவதும... மேலும் பார்க்க

நூறுநாள் வேலை கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலை கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சே... மேலும் பார்க்க