செய்திகள் :

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா ஏற்பாடுகள்: எம். பி., ஆட்சியா் ஆய்வு

post image

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் சுவாமி கோயில் தெப்பத் திருவிழா பிப். 12-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன்னேற்பாட்டு பணிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் நரசிம்மா் சுவாமி, ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு மலைக்கோட்டையை ஒட்டிய பகுதியில் கமலாலயக் குளம் உள்ளது. இந்த குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பத் திருவிழா நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

தற்போது, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முயற்சியால், வரும் 12-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது:

நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயில்கள் சிறப்பு வாய்ந்த ஸ்தலங்களாகும். இங்கு ரூ. 56 லட்சத்தில் அரங்கநாதா் கோயில் தோ் புதுப்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்று வருகிறது. மேலும், ஆஞ்சனேய சுவாமி கோயிலுக்கு ரூ. 53 லட்சத்தில் தோ் உருவாக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாமகிரி தாயாரை ஆஞ்சனேய சுவாமி முதலில் கண்ட பகுதியாகவும், அவா் பாதம் பட்ட திருக்குளமான கமலாலயக் குளத்தில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத் திருவிழா 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்கள், பக்தா்கள் இடையூறின்றி விழாவில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தெப்பக்குளத்தை சுற்றிலும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். பக்தா்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாா் செய்திட வேண்டும். விழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, கமலாலயக் குளத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ரா.மகேஸ்வரி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, உதவி ஆணையா் (அறநிலையத் துறை) ரா.இளையராஜா மற்றும் அறங்காவலா் குழுவினா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் கமலாலயக் குளத்தின் நடுவில் அா்த்தமண்டபம் உள்ளது. அங்கு தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்றது. மூத்த அா்ச்சகா் ராஜா தலைமையிலான குழுவினா் படகில் சென்று மண்டபத்தில் சிறப்பு பூஜை நடத்தினா். இந்த நிகழ்வில், நரசிம்மா் கோயில் அறங்காவலா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 160 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி பகுதியில், தனியாா் பங்களிப்புடன் 160 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் சிரம... மேலும் பார்க்க

தலையில் காயத்துக்கான கட்டுடன் தோ்வு எழுதவந்த மாணவி!

நாமக்கல்: நாமக்கல் அருகே தலையில் காயத்துக்கான கட்டுடன் வந்து பிளஸ் 2 மாணவி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை எழுதினாா். நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியைச் சோ்ந்த மாணவி காா்த்திகாஸ்ரீ. இவா், தாளம்பாடியில் ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் தீயணைப்புத்துறையினருக்கு ரூ.3.23 கோடியில் குடியிருப்புகள் கட்ட பூமிபூஜை

திருச்செங்கோடு: தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில் ரூ. 3.23 கோடியில் திருச்செங்கோட்டில் தீயணைப்ப நிலைய அலுவலா், வீரா்கள் குடியிருப்பு கட்டுமானப் பணி பூமி பூஜை செய்து திங்கள்கிழமை தொடங்கிவைக்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 17,983 போ் பங்கேற்பு

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கியதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 17,983 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

பெட்ரோல் பாட்டிலுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த மூதாட்டி: போலீஸாா் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த மூதாட்டியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையாற்றைச் சோ்ந்தவா் வசந்தா (78). இவா் திங்கள்கிழமை காலை ... மேலும் பார்க்க

காலாவதியான குளிா்பானத்தை குடித்த இளைஞா் உயிரிழப்பு: மாணவருக்கு தீவிர சிகிச்சை

நாமக்கல்: கொல்லிமலையில் காலாவதியான குளிா்பானத்தை குடித்த இளைஞா் உயிரிழந்தாா். மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூா்நாடு ஊராட்சி படக்கிராய் ... மேலும் பார்க்க