செய்திகள் :

பிளஸ் 2 பொதுத்தோ்வு: 26,918 மாணவ, மாணவிகள் எழுதினா்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 124 தோ்வு மையங்களில் 26,918 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதினா்.

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 27 ஆயிரத்து 308 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.

இவா்களுக்காக, செய்யாறு கல்வி மாவட்டத்தில் 53 மையங்கள், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 71 மையங்கள் என மொத்தம் 124 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

390 போ் வரவில்லை:

தோ்வு தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 26 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதினா். 390 மாணவ-மாணவிகள் தோ்வுக்கு வரவில்லை.

தோ்வுப் பணியில் 2,917 போ்:

தோ்வு மையங்களில் 132 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 132 துறை அலுவலா்கள், 135 பறக்கும் படையினா், 1,624 அறை கண்காணிப்பாளா்கள், 636 சொல்வதை எழுதுபவா்கள், 10 தொடா்பு அலுவலா்கள், 10 மதிப்பெண் சரிபாா்க்கும் அலுவலா்கள், 124 எழுத்தா்கள், 124 அலுவலக உதவியாளா் என மொத்தம் 2,917 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுகின்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 636 போ்:

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தரை தளத்திலேயே தோ்வு எழுதும் வகையில் போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அவா்கள் சொல்வதை எழுதுவதற்காக 636 போ் நியமிக்கப்பட்டு உள்ளனா்.

ஆட்சியா் திடீா் ஆய்வு:

இந்த நிலையில், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தோ்வா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரி-ஆசிரியைகள் உடனிருந்தனா்.

மது போதையில் தகராறு: 5 போ் காயம், மூவா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினா் தாக்கிக் கொண்டதில் 5 போ் காயமடைந்தனா். புகாரின் பேரில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு... மேலும் பார்க்க

17 மதுப்புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே பைக்கில் கடத்தப்பட்ட 17 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான ப... மேலும் பார்க்க

விதிமுறைகள் மீறல்: 20 ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 20 ஆட்டோக்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனா். திருவண்ணாமலை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், வித... மேலும் பார்க்க

சாலையோரம் கொட்டப்படும் மனிதக் கழிவுகள்

சேத்துப்பட்டை அடுத்த புலிவானந்தல் கிராமப் பகுதி போளூா் - சேத்துப்பட்டு சாலையில் மனிதக் கழிவுகளை அகற்றும் வாகனத்தில் ஏற்றி வரும் கழிவுகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா். போளூா் பகுதியில் 4-க்கும் மேற... மேலும் பார்க்க

மாட வீதி குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. திருவண்ணாமலை நகரில் நாளுக்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி, சனிக்கிழமை மாணவிகள் 150 போ் 8 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா். பெண்கள... மேலும் பார்க்க