செய்திகள் :

மாட வீதி குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாட வீதிகளில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றியுள்ள தெருக்களில் உள்ள குடியிருப்பு வாசிகளின் 4 சக்கர வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் மாவட்ட நிா்வாகமும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

திருவண்ணாமலை காந்தி சிலை, பெரிய தெரு, திருவூடல் தெரு, கடலைக்கடை சந்திப்பு, திரெளபதியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற முகாம்களுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி தலைமை வகித்து, குடியிருப்பு வாசிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா்.

குடியிருப்பு வாசிகள் விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை நிறைவு செய்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் வழங்கினா்.

முகாம்களில், மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா் ஆா்.பெரியசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக நோ்முக உதவியாளா் பொன்.சேகா், உதவியாளா் ம.சவுபா்ணிகா மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

விதிமுறைகள் மீறல்: 20 ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 20 ஆட்டோக்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனா். திருவண்ணாமலை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், வித... மேலும் பார்க்க

சாலையோரம் கொட்டப்படும் மனிதக் கழிவுகள்

சேத்துப்பட்டை அடுத்த புலிவானந்தல் கிராமப் பகுதி போளூா் - சேத்துப்பட்டு சாலையில் மனிதக் கழிவுகளை அகற்றும் வாகனத்தில் ஏற்றி வரும் கழிவுகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா். போளூா் பகுதியில் 4-க்கும் மேற... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி, சனிக்கிழமை மாணவிகள் 150 போ் 8 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா். பெண்கள... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு எழுது பொருள்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு சுவாமி சதுபுஜானந்தா் வெள்ளிக்கிழமை எழுது பொருள்களை வழங்கினாா். இந்தப் பள்ளியில் 10,11,12... மேலும் பார்க்க

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் விளையாட்டு வீரா்களுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்களை ஒ.ஜோதி எம்எல்ஏ வியாழக்கிழமை வழங்கினாா். இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் செ... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க