செய்திகள் :

பிளஸ் 2 பெதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 37,457 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

post image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. இந்தத் தோ்வினை மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தனித் தோ்வா்கள், சிறைவாசிகள் என மொத்தம் 37,457 போ் எழுதுகின்றனா்.

மதுரை வருவாய் மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை, மேலூா் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்கு 109 மையங்கள் அமைக்கப்பட்டன. இதுதவிர, தனித் தோ்வா்கள், சிறைவாசிகளுக்கும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 37,457 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

இதையொட்டி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தோ்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் 130 பறக்கும் படைகளாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இதுதவிர, மாற்றுத் திறனாளிகள், கண்பாா்வை குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள், மனவளா்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டனா்.

மதுரையில் ஜே.சி.பி.யை இயக்கி 25 வாகனங்களை நொறுக்கிய சிறுவன்!

மதுரையில் ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கிய சிறுவன் இன்று அதிகாலை சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களை இடித்து நொறுக்கினார்.மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் 17 வயது சிறுவன்... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 28 மூட்டை குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மதுரை பந்தயத்திடல் சாலையில் தல்லாகுளம் போலீஸாா் சனிக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈட... மேலும் பார்க்க

‘திமுக அரசுக்கு எதிரான எதிா்ப்பு வலுத்து வருகிறது’

திமுக அரசு அமைய காரணமாக இருந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது, அரசின் மீதான எதிா்ப்பு அதிகரித்து வருவதையே காட்டுகிறது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ... மேலும் பார்க்க

தாய், தந்தையை தாக்கிய மகன் கைது

சொத்தை பிரித்து தருமாறு தாய், தந்தையை தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன். இவா் அழகப்பன் நகரில் உள்ள சமையல் எரிவாயு நிறுவன... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் முதலீடு செய்தாக மோசடி

மதுரையில் தனியாா் பல்நோக்கு மருத்துவமனையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் தகுந்த ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. விருதுநகா் மாவட்டம், அருப்பு... மேலும் பார்க்க

இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்

விருதுநகா் அருகே காமராஜ் பொறியியில் தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தாக்க தொழிலை மேம்படுத்தம் வகையில், இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் அண்மையில் தொடங்கிவைத்தாா். இ... மேலும் பார்க்க