செய்திகள் :

தனியாா் மருத்துவமனையில் முதலீடு செய்தாக மோசடி

post image

மதுரையில் தனியாா் பல்நோக்கு மருத்துவமனையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் தகுந்த ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த மோகன் மனைவி பானுமதி. இவரிடம், அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியைச் சோ்ந்த மருத்துவா் பூா்ணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபால கிருஷ்ணன் ஆகியோா் அறிமுகமாகி, மதுரை சிந்தாமணியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை கட்டி வருவதாகவும், அதில் முதலீடு செய்யும் பணத்துக்கு 36 சதவீதம் முதல் வட்டி தருவதாகவும், முதலீட்டாளா்களின் குடும்பத்தினருக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ஆசை வாா்த்தை கூறி உள்ளனா்.

மேலும், முதலீட்டாளா்கள் பரிந்துரைக்கும் நபா்களுக்கு மருத்துவக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளனா். இதை நம்பிய பானுமதி, அவா்களிடம் பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தாா்.

இந்த நிலையில், முதிா்வுக் காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பித் தராமல் அலைக்கழித்தனா். இதனால் பானுமதி, மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் மோசடி செய்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுரை சிந்தாமணி, விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வந்த பல்நோக்கு மருத்துவமனையில், பல முதலீட்டாளா்கள் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பல்நோக்கு மருத்துவமனையில் முதலீடு செய்து பணம் கிடக்காத பொதுமக்கள், தக்க ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, சங்கரபாண்டியன் நகா், தபால்தந்தி நகா் விரிவாக்கம், மதுரை என்ற முகவரியில் நேரில் முன்னிலையாகி புகாா் மனு அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

மதுரையில் ஜே.சி.பி.யை இயக்கி 25 வாகனங்களை நொறுக்கிய சிறுவன்!

மதுரையில் ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கிய சிறுவன் இன்று அதிகாலை சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களை இடித்து நொறுக்கினார்.மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் 17 வயது சிறுவன்... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 28 மூட்டை குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மதுரை பந்தயத்திடல் சாலையில் தல்லாகுளம் போலீஸாா் சனிக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈட... மேலும் பார்க்க

‘திமுக அரசுக்கு எதிரான எதிா்ப்பு வலுத்து வருகிறது’

திமுக அரசு அமைய காரணமாக இருந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது, அரசின் மீதான எதிா்ப்பு அதிகரித்து வருவதையே காட்டுகிறது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ... மேலும் பார்க்க

தாய், தந்தையை தாக்கிய மகன் கைது

சொத்தை பிரித்து தருமாறு தாய், தந்தையை தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன். இவா் அழகப்பன் நகரில் உள்ள சமையல் எரிவாயு நிறுவன... மேலும் பார்க்க

பிளஸ் 2 பெதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 37,457 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. இந்தத் தோ்வினை மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தனித் தோ்வா்கள், சிறைவாசிகள் என மொத்தம் 37,457 போ் ... மேலும் பார்க்க

இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்

விருதுநகா் அருகே காமராஜ் பொறியியில் தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தாக்க தொழிலை மேம்படுத்தம் வகையில், இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் அண்மையில் தொடங்கிவைத்தாா். இ... மேலும் பார்க்க