செய்திகள் :

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

post image

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

பிப்ரவரி வரை, காய்கறிகளின் விலை உயர்வால், மாத பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்திருந்த நிலையில், மார்ச் மாதத்தில், விலை குறைந்து பணத்தை மிச்சப்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்பனையான காய்கறிகளின் விலை தற்போது கிலோ ரூ.15-20 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், ஒருபக்கம் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனைப்பட்டாலும், காய்கறிகளை வாங்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்குக் காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால், கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள் ஒன்றுக்கு தற்போது 800 முதல் 900 லாரிகளில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. வரத்து அதிகரித்திருப்பதால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளது.

ஆனால், மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த டிசம்பரில் 600 லாரிகள் மட்டும்தான் வந்தது. அதனால், காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது.

அப்போது ஒரு கிலோ காய்கறி விலை ரூ.40 வரை இருந்தது. இது சில்லறை விற்பனைக்கு வரும்போது இரண்டு மடங்கு வரை விற்பனையாகி வந்த நிலையில், கோயம்பேட்டில் தற்போது ரூ.15 - 20க்கு காய்கறிகள் விற்பனையாவதால், சில்லறை விற்பனையிலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய விலை நிலரப்படி, தக்காளி ஒரு கிலோ ரூ.15க்கும், முருங்கை ஒரு கிலோ ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது.

முள்ளங்கி, கோஸ் போன்றவை தலா கிலோ ரூ. 8க்கும், பீட்ரூட், கத்தரிக்காய், அரைக்காய் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.10க்கும் விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது.

பெரிய வெங்காயம் விலை கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.20 வரை விலை குறைந்திருந்தாலும், சில்லறை விற்பனை கடைகளில் விலையைக் குறைக்க மனமில்லாமல், வியாபாரிகள் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆனால், இந்த நிலை மார்ச் மற்றும் ஏப்ரல் வரை மட்டுமே நீடிக்கும் என்றும், கோடை வெப்பம் காரணமாக மீண்டும் விலை உயரும் என்றும் காய்கறி வியாபாரிகள் கூறியுள்ளனர். எனவே, இதனை இல்லத்தரசிகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க