செய்திகள் :

மில்லியன் கணக்கில் தோரியம்! அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்பற்றாக்குறையே இல்லை!

post image

சீனா தன்னிடமுள்ள எல்லையற்ற ஆற்றல் மூல ஆதாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த சீனாவுக்கும் அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் எனக் கூறப்படுகிறது.

உலகில் அதிக அளவு தோரியம் இருப்பு கொண்ட நாடாக சீனா உள்ளது. எனினும் அவர்களின் தோரியம் ஆற்றல் ஆதாரம் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

சமீபத்தில் வகைப்படுத்தப்பட்ட புவியியல் ஆய்வில் மில்லியன் கணக்கிலான தோரியம் இருப்பை சீனா தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

கிழக்காசியாவில் உள்ள மங்கோலியா பாயன் ஓபோ உள்சுரங்கத்தில், உலகின் மிகவும் அரிதான தனிமமான தோரியம் இருப்பை அதிக அளவில் சீனா கண்டறிந்துள்ளது.

கதிரியக்கத் தனிமமானது ஆற்றல் மூலத்திற்கு மாற்றாக அமையும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது. புதைபடிவ எரிபொருள்களுக்கும் யுரேனியம் சார்ந்த அணுசக்தி உற்பத்திக்கும் இத்தகைய கதிரியக்கத் தனிமம் மாற்றாக அமையும்.

தோரியமானது கதிரியக்கத் தனிமமாகும். மங்கோலியாவில் உள்ள பாயன் ஓபோ உள்சுரங்கத்தில் இரும்பு தாது பிரித்தெடுக்கும்போது வெளிவரும் கழிவில் போதுமான அளவு தோரியம் உள்ளது. இதில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.

இந்தத் தனிமம் முழுவதும் பிரித்தெடுக்கப்பட்டால், ஒட்டுமொத்த சீனாவுக்கும் அடுத்த 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என சில மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

அதோடு மட்டுமின்றி அணு எரிபொருளுக்கான மாற்றாகவும் தோரியம் கருதப்படுகிறது. பல நாடுகளின் அணு உலைகளில் யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தோரியம் பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிவரும் ரேடியோ கதிரியக்கக் கழிவுகள் யுரேனியத்தை விடக் குறைவாக உள்ளது.

அதாவது, தோரியத்தில் இருந்து வெளியேறும் கதிரியக்கக் கழிவின் ஆயுள்காலம், யுரேனிய கதிரியக்கக் கழிவின் ஆயுளை விடக் குறைவு. இதனால் தோரியம் அடிப்படையிலான அணு உலைகளில் பாதிப்பு குறைவு.

தோரியத்தால் ஏற்படும் பலன்கள்

தோரியம் சார்ந்த அணு ஆற்றல் உற்பத்திக்கு மாறுவது கார்பன் வெளியேற்றத்தை பெரிய அளவில் குறைக்கும். ஆற்றல் உற்பத்திக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைக்கும். மேலும் அடுத்த தலைமுறை அணுசக்தி உற்பத்தியில் சீனாவை உலகளவில் முதன்மையாக நிலைநிறுத்தும்.

ஆனால், தோரியத்தை மூலமாகக் கொண்டு அணு ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சீனாவின் முயற்சி இன்னும் முழுமையாக வெற்றிபெறவில்லை. சீனாவில் 55% மின்சார உற்பத்தி தற்போது நிலக்கரியைச் சார்ந்தே உள்ளது.

2021ஆம் ஆண்டு கோபி பாலைவனத்தில் தோரியம் மோல்டன் உப்பு உலையை சீனா நிறுவியது. தோரியத்தை வணிக சந்தைக்கு எடுத்துச்செல்லும் முயற்சியாக இந்த சோதனையில் சீனா ஈடுபட்டது. தற்போதும் அந்த சோதனை தொடர்ந்து வருகிறது.

தற்போது உள்ள உலைகள் யாவும் யுரேனியத்தின் அடிப்படையில் ஆற்றலை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தோரியம் கிடைத்தாலும் அதனை யுரேனியமாக மாற்றி பின்னர் அணு உலைகளில் ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தோரியம் என்ற தனிமத்தை நேரடியாக ஆற்றல் உற்பத்தி மூலமாக மாற்றும் சோதனையில் சீனா வெற்றி பெற்றால், தற்போது இருக்கும், ஆபத்தான முறையில் அணுசக்தி தயாரிக்கும் முறையை மாற்றியமைத்த பெருமை சீனாவையே சேரும்.

போர் நிறுத்தம் அல்ல; நிலையான அமைதியே உக்ரைனின் இலக்கு! -ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

கீவ் : உக்ரைனில் நிலையான அமைதி நிலவுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.முன்னதாக, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு க... மேலும் பார்க்க

தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்!

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:தஜிகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக நிலநடுக... மேலும் பார்க்க

புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் நேரத்தை செலவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்... மேலும் பார்க்க

அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்! 2025 பற்றி பாபா வங்காவின் கணிப்பு

பாபா வங்கா கணித்திருப்பதாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடு, அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருப்ப... மேலும் பார்க்க

அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்... மேலும் பார்க்க

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்

தற்காலிக போா் நிறுத்தத்தை நீட்டிக்கும் பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்காததால், காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரே... மேலும் பார்க்க