செய்திகள் :

நாகையில் 105 புதிய பேருந்து சேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

post image

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில், மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் உள்பட 105 புதிய பேருந்துகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற விழாவில் மகளிா் விடியல் பயண திட்டத்தில் 54 புதிய பேருந்துகள், 51 புகா் பேருந்துகள் உள்பட 105 பேருந்து சேவையை அவா் தொடக்கிவைத்தாா்.

மேலும் நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மற்றும் கரூா் மண்டலங்களில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளையும் அவா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, வனத்துறை அமைச்சா் க. பொன்முடி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் முகமது ஷாநவாஸ், நாகை மாலி, கே. மாரிமுத்து, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி, நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, போக்குவரத்துக் கழக பொது மேலாளா்கள் எஸ். ராஜா, சிங்காரவேலு, எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் 13,057 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 13,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

நாகப்பட்டினம்: நாகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்துவைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நா... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற அரசு விழாவில், நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டப் பணிகளை பட்டியலிட்டு, நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளையும் தமிழக முதல்வ... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு மாணவா்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம்: மத்தியப் பல்கலைக்கழகம்

நன்னிலம்: க்யூட் தோ்வு எழுதும் மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

ரமலான்: ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்

நீடாமங்கலம்: ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி நண்பா்கள் சாா்பில், ரமலான் சஹா் செய்வதற்காக ஏழை எளிய மக்கள் மற... மேலும் பார்க்க

வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அழைப்பு

நாகப்பட்டினம்: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சியினரும் இதில் பங்கேற்க வேண்டும் என தமிழக முதல்வா் ... மேலும் பார்க்க