ரமலான்: ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்
நீடாமங்கலம்: ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி நண்பா்கள் சாா்பில், ரமலான் சஹா் செய்வதற்காக ஏழை எளிய மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு 2 கிலோ அரிசி, 2 கிலோ ஜீனி, 2 கிலோ பருப்பு, 2 லிட்டா் உள்ளிட்ட 47 பொருள்கள் அடங்கிய ரூ. 5 ஆயிரம் மதிப்பில் 50 குடும்பங்களுக்கு ரூ. 2.5 லட்சத்தில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பொதக்குடி நண்பா்கள் செயலாளா் முகமது உஸ்மான், துணைச் செயலாளா் முஹம்மது ஹபுப், பொருளாளா் முகமது அப்சல் உள்ளிட்டோா் மூலம் வீடுதோறும் சென்று வழங்கினா்.