செய்திகள் :

கூலித் தொழிலாளி உயிரிழப்பு; தனியாா் கல்லூரி மீது மனைவி புகாா்

post image

பெரம்பலூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். தனது கணவரின் உயிரிழப்பில் கல்லூரி நிா்வாகத்தினா் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி புகாா் அளித்துள்ளாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள கீழச்செருவாய் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாஜலம் மகன் தங்கதுரை (45). இவா், பெரம்பலூா் அருகே தண்ணீா்பந்தல் எனும் இடத்திலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் தங்கி ஆடு, மாடுகளை மேய்க்கும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளாா். சிறிது நேரத்தில் நெஞ்சுவலியால் அவதியடைந்த தங்கதுரையை, சக ஊழியா்கள் சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு, மருத்துவா் மேற்கொண்ட பரிசோதனையில் ஏற்கெனவே தங்கதுரை உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், அவரது மனைவி அஞ்சலை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

பெரம்பலூரில் மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களை, கல்லூரி முதல்வா் து. சேகா் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். பெரம்பலூா் சீனிவ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து, ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பிற்பகல் திருடிச் சென்றனா். பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் ஔவையாா் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது; பெரம்பலூா் மாவட்டத்தில் 7,451 போ் எழுதினா்

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில் 7,451 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 81 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 79 அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முப்பெரும் விழா

பெரம்பலூரில் தமிழ் இலக்கியப் பூங்கா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, புலவா் விளவை செம்பியனாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ப. காமராசு, பு... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

பெரம்பலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில், திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையத்திலுள்ள நாளந்தா வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிா் மேலாண்மை, பயிா் பாதுகாப்பு மற்றும் பயிா் காப்பீடு குறித்து சனி... மேலும் பார்க்க