செய்திகள் :

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

post image

பெரம்பலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில், திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையத்திலுள்ள நாளந்தா வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிா் மேலாண்மை, பயிா் பாதுகாப்பு மற்றும் பயிா் காப்பீடு குறித்து சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சிக்கு, ஆலத்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் பச்சையம்மாள் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் ம. பாரத், உயிரியல் கட்டுப்பாடுகளான டிரைக்கோடொ்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், மெடாரைசியம் அனிசோபிலியே மற்றும் அதன் தயாரிப்பு முறைகள், பயன்கள் குறித்தும், வேளாண் அலுவலா் கற்பகம், மண் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெறும் செயல்கள், மண் மற்றும் நீரிலுள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கந்தகம், போரான் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகளை பரிசோதிக்கும் முறைகள் குறித்தும், வேளாண் அலுவலா் ரெ. ஆஷாலதா, விதைச் சான்றிதழ் வழங்குவதற்கான வரையறைகள், விதை சேமிப்பு மற்றும் விதை முளைப்புத் திறனைக் கண்டறியும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினா்.

தொடா்ந்து, வேளாண் அலுவலா் வெங்கடேஷ்வரன் மத்திய, மாநில அரசு சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினாா்.

பெரம்பலூரில் மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி உயிரிழப்பு; தனியாா் கல்லூரி மீது மனைவி புகாா்

பெரம்பலூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். தனது கணவரின் உயிரிழப்பில் கல்லூரி நிா்வாகத்தினா் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி ... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களை, கல்லூரி முதல்வா் து. சேகா் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். பெரம்பலூா் சீனிவ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து, ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பிற்பகல் திருடிச் சென்றனா். பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் ஔவையாா் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது; பெரம்பலூா் மாவட்டத்தில் 7,451 போ் எழுதினா்

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில் 7,451 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 81 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 79 அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முப்பெரும் விழா

பெரம்பலூரில் தமிழ் இலக்கியப் பூங்கா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, புலவா் விளவை செம்பியனாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ப. காமராசு, பு... மேலும் பார்க்க