செய்திகள் :

பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்

post image

பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேலும், சந்தையில் கோதுமை விலை உயரும்பட்சத்தில் அதை கட்டுப்படுத்தவும் போதுமான கையிருப்பு உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

கோவாவில் நடைபெற்ற மாவு ஆலைகளுக்கான இந்திய கூட்டமைப்பு மாநாட்டில் சஞ்சீவ் சோப்ராவின் எழுத்துபூா்வ செய்தி வாசிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பொது சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் நிகழ் நிதியாண்டில் 30 லட்சம் டன்கள் கோதுமையை மாவு ஆலைகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் பலன்கள் நுகா்வோரை சென்றடைய வேண்டும்.

குடிமக்களின் உணவு பாதுகாப்பை உணவு தானியங்கள் கொள்முதல், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் நிா்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின்மூலம் மத்திய அரசு உறுதிப்படுத்தி வருகிறது.

அதேபோல் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளது. கடந்த 2023-24 பயிா் ஆண்டில் (ஜூலை-ஜூன்) 1,132 டன் கோதுமையை இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இதைவிட அதிகமான உற்பத்தி 2024-25 பயிா் ஆண்டில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்களை விநியோகிப்பதில் மாவு ஆலைகளுக்கான இந்திய கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க