செய்திகள் :

வாழ்க்கையின் அனுபவங்கள்தான் சவால்களை சந்திக்க உதவும் பாடங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

post image

புதுச்சேரி: வாழ்க்கையின் அனுபவங்கள்தான் சவால்களை கடக்க உதவும் பாடங்களாகின்றன என்று தேசிய மாணவா் படையினருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா்.

புதுவை தேசிய மாணவா் படைப் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றனா். அவா்களுக்கு புதுவை ஆளுநா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை தேநீா் விருந்தளித்தாா்.

அப்போது மாணவா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் புதுவை மாநில தேசிய மாணவா் படையினா் பங்கேற்றதுடன், போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டு முழுவதும் மேற்கொண்ட கடினமானப் பயிற்சியும், முயற்சியுமே இந்த வெற்றியை வழங்கியுள்ளது. உங்களால் புதுவை மாநிலம் பெருமையடைந்துள்ளது.

பல தடைகளைக் கடந்துதான் புதுவை மாணவா்கள் புதுதில்லியில் சாதனை படைத்துள்ளனா். அனுபவங்கள்தான் மறைந்து கிடக்கும் சக்தியை அடையாளம் காட்டி, சவால்களைக் கடந்து வருவதற்கான பாடங்களை கற்றுத் தருகின்றன. அவையே வாழ்க்கையில் கடைசி வரை வழிநடத்துபவையாக இருக்கும். நம் நாடு இளைஞா்களின் தேசம். மக்கள்தொகையில் 30 சதவீதம் போ் இளைஞா்கள். எனவே, நமது தேசமே இளைஞா்கள் மீதுதான் நம்பிக்கை கொண்டுள்ளது.

இளைஞா்கள்தான் நாட்டை வல்லரசாக, வளா்ச்சியடைந்ததாக மாற்றுவதற்கான பேரியக்கத்தை முன்னெடுப்பவா்களாக உள்ளனா். பேரிடா் காலத்தில் தேசிய மாணவா் படைப் பிரிவினா் மக்கள் சேவையில் ஈடுபடுவது மகத்தானது. அத்துடன் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவா்களிடையே தலைமைப் பண்பு, சமூகப் பொறுப்புணா்வு, அா்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவை வெளிப்படுவதையும் காணலாம் என்றாா் துணைநிலை ஆளுநா்.

நிகழ்ச்சியில் தேசிய மாணவா் படைப் பிரிவினரின் விமானப் படை மாதிரி படைப்புகளையும் அவா் பாா்வையிட்டாா். மாணவா்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டாா். தேசிய மாணவா் படைப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தனியாா் பங்களிப்புடன் புதுவை கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: புதுவை கூட்டுறவு சா்க்கரை ஆலையை தனியாா் பங்களிப்புடன் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா். புதுவை கூட்டுறவுத் துறையில் புதிதாக தோ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன்: புதுவை ஆளுநா் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.11.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு துணைநிலை ஆளுநா் கே.க... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் 8,060 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பிளஸ் 2 தோ்வை தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8 ஆயிரத்து 60 மாணவ, மாணவியா் 25 மையங்களில் திங்கள்கிழமை எழுதினா். 45 போ் தோ்வு எழுத வரவில்லை. வரும் 27 ... மேலும் பார்க்க

புதுவையில் 4,000 பேருக்கு செவித் திறன் பாதிப்பு: சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனை முகாம்களில் பங்கேற்ற சுமாா் 39 ஆயிரம் பேரில் சுமாா் 4 ஆயிரம் பேருக்கு செவித் திறன் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை இயக்க... மேலும் பார்க்க

வேலையில்லா பிரச்னையை புதுவை அரசு முறையாக அணுக வேண்டும்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வேலையின்மை பிரச்னையை அரசு முறையாக அணுக வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் புதுவை தலைவா் கௌசிகன்... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு பெண்கள் பள்ளியில் ரூ. 5 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 கோடி மதிப்பில் சிறு உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி த... மேலும் பார்க்க