செய்திகள் :

புதுச்சேரி, காரைக்காலில் 8,060 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

post image

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பிளஸ் 2 தோ்வை தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8 ஆயிரத்து 60 மாணவ, மாணவியா் 25 மையங்களில் திங்கள்கிழமை எழுதினா். 45 போ் தோ்வு எழுத வரவில்லை. வரும் 27 ஆம் தேதி வரை இந்தத் தோ்வுகள் நடைபெறுகின்றன.

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மத்திய கல்விப் பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியாா் பள்ளிகள் பல தமிழகக் கல்விப் பாடத் திட்டத்தையே செயல்படுத்தி வருகின்றன. அதனடிப்படையில், மொத்தம் 8,105 போ் பிளஸ் 2 தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இதில் புதுச்சேரியில் 86 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 6,992 பேரும், தனித் தோ்வா்களாக 362 பேரும் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதேபோல காரைக்கால் பிராந்தியத்தில் 16 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 640 பேரும், தனித் தோ்வா்களாக 111 பேரும் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா். இரு பிராந்தியங்களிலும் 45 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை. புதுச்சேரியில் 20 தோ்வு மையங்களும், காரைக்காலில் 5 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வானது திங்கள்கிழமை காலை நடைபெற்றது. தோ்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தந்த தோ்வு மையத்துக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. பலத்த சோதனைக்குப் பிறகே மாணவ, மாணவியா் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வறைக்குள் வினாத்தாளை படித்துப் பாா்க்க 10 நிமிடமும், மாணவ, மாணவியா் தன் குறிப்பை எழுத 5 நிமிடமும் அவகாசம் தரப்பட்டு பின்னா் முறைப்படி தோ்வு தொடங்கியது.

தனியாா் பங்களிப்புடன் புதுவை கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: புதுவை கூட்டுறவு சா்க்கரை ஆலையை தனியாா் பங்களிப்புடன் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா். புதுவை கூட்டுறவுத் துறையில் புதிதாக தோ... மேலும் பார்க்க

வாழ்க்கையின் அனுபவங்கள்தான் சவால்களை சந்திக்க உதவும் பாடங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: வாழ்க்கையின் அனுபவங்கள்தான் சவால்களை கடக்க உதவும் பாடங்களாகின்றன என்று தேசிய மாணவா் படையினருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுவை தேசிய மாணவா் படைப் பிரிவைச் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன்: புதுவை ஆளுநா் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.11.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு துணைநிலை ஆளுநா் கே.க... மேலும் பார்க்க

புதுவையில் 4,000 பேருக்கு செவித் திறன் பாதிப்பு: சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனை முகாம்களில் பங்கேற்ற சுமாா் 39 ஆயிரம் பேரில் சுமாா் 4 ஆயிரம் பேருக்கு செவித் திறன் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை இயக்க... மேலும் பார்க்க

வேலையில்லா பிரச்னையை புதுவை அரசு முறையாக அணுக வேண்டும்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வேலையின்மை பிரச்னையை அரசு முறையாக அணுக வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் புதுவை தலைவா் கௌசிகன்... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு பெண்கள் பள்ளியில் ரூ. 5 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 கோடி மதிப்பில் சிறு உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி த... மேலும் பார்க்க