செய்திகள் :

தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்!

post image

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:

தஜிகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அட்சரேகை: 37.98 ஆகவும், நீளம் 72.87 ஆகவும் இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு, இப்பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அதன் ஆழம் 92 கி.மீ ஆக இருந்தது.

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல் இல்லை.

தஜிகிஸ்தான் பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்ட ஒரு மலை நாடு என்பதால் காலநிலை ஆபத்துக்களால் பாதிக்கப்படக்கூடியது. இதனால் நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி, பனிச்சரிவுகள், நிலச்சரிவுகளால் அடிக்கடி நிலவுகின்றது.

2050-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீத பனிப்பாறைகள் மறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தஜிகிஸ்தானின் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது. தஜிகிஸ்தான் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியன் கணக்கில் தோரியம்! அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்பற்றாக்குறையே இல்லை!

சீனா தன்னிடமுள்ள எல்லையற்ற ஆற்றல் மூல ஆதாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த சீனாவுக்கும் அடுத்த 60,000 ஆண்டுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் எனக் கூறப்படுகிறது. உலகில் அதிக அளவு த... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் அல்ல; நிலையான அமைதியே உக்ரைனின் இலக்கு! -ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

கீவ் : உக்ரைனில் நிலையான அமைதி நிலவுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.முன்னதாக, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு க... மேலும் பார்க்க

புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் நேரத்தை செலவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்... மேலும் பார்க்க

அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்! 2025 பற்றி பாபா வங்காவின் கணிப்பு

பாபா வங்கா கணித்திருப்பதாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடு, அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருப்ப... மேலும் பார்க்க

அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்... மேலும் பார்க்க

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்

தற்காலிக போா் நிறுத்தத்தை நீட்டிக்கும் பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்காததால், காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரே... மேலும் பார்க்க