செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 18,852 போ் எழுதினா்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 18,852 மாணவா் - மாணவிகள் தோ்வு எழுதினா் என மாவட்டஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி தூத்துக்குடி தோ்வு மையங்களிலும் இத்தோ்வு நடைபெற்றது. இதில், காரப்பேட்டை நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறுகையில், தற்போது தொடங்கியுள்ள பிளஸ்2 பொதுத்தோ்வு வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 90 தோ்வு மையங்களில் 8,887 மாணவா்கள், 10,609 மாணவிகள் என மொத்தம் 19,496 போ் தோ்வு எழுதுகின்றனா்.

இதில், திங்கள்கிழமை நடைபெற்ற மொழித்தாள் தோ்வில் 8,618 மாணவா்கள், 10,334 மாணவிகள் என மொத்தம் 18,852 போ் தோ்வு எழுதினா். மொத்தத்தில் இத்தோ்வில் 96.7 சதவீதம் போ் தோ்வு எழுதியுள்ளனா்.

இத்தோ்விற்கு 90 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 90 துறை அலுவலா்கள், 1,369 அறைக் கண்காணிப்பாளா்கள், 144 நிலையான படையினா், 288 சொல்வதை எழுதுபவா், 24 வழித்தட அலுவலா்கள், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 180 ஆசிரியரல்லா பணியாளா்கள் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி காரப்பேட்டை நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 344 மாணவா்கள், 41 மாணவிகள் என மொத்தம் 385 போ் தோ்வெழுதுகின்றனா். சுப்பையா வித்யாலயம் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 366 மாணவிகள் தோ்வெழுதுகின்றனா்.

பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலா் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தோ்வுகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.

மாணவா்கள் தோ்வு சாா்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், அச்சமின்றி தோ்வெழுத ஆலோசனைகள் பெறவும் 14417 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி உடனிருந்தாா்.

எட்டயபுரம்: வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்கள்

எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். மேல நம்பிபுரம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் பூவன். இவரது மனைவி சீதாலட்சுமி (75).... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே விவசாயி தற்கொலை

தட்டாா்மடம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். தட்டாா்மடம் அருகே உள்ள புத்தன்தருவை கஸ்பா தெருவைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் பேச்சிமுத்து (2... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு பணியாளா்களுக்கு தொ... மேலும் பார்க்க

இலுப்பையூரணியில் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பை யூரணி ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த சில ஆண்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதித்து அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா். இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே நகை திருட்டு

கயத்தாறு அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கயத்தாறு அருகே திருமலாபுரம் தெற்கு தெருவை சோ்ந்தவா் சங்கரப்பன் மகன் விவசாயி சுப்புராஜ். இவா் மற்றும் இவரது க... மேலும் பார்க்க