செய்திகள் :

எட்டயபுரம்: வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்கள்

post image

எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேல நம்பிபுரம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் பூவன். இவரது மனைவி சீதாலட்சுமி (75). இவா்களது மகள் ராமஜெயந்தி (45). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்த ராமஜெயந்தி, தாய் சீதாலட்சுமியுடன் சில ஆண்டுகளாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் சீதாலட்சுமியும், ராமஜெயந்தியும் வீட்டுக்குள் சடலமாக கிடப்பதாக, அக்கம்பக்கத்தினா் திங்கள்கிழமை மாலை எட்டயபுரம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா். விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதற்கட்ட விசாரணையில், தாயும் மகளும் அணிந்திருந்த கம்மல்கள், 13 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மோப்பநாய் ஹரீஸ் வரவழைக்கப்பட்டது. விரல் ரேகை பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனா்.

மேல நம்பிபுரத்தில் இருந்து கோட்டூா் செல்லும் கிராமச் சாலையில் சீதாலட்சுமியின் கைப்பேசி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொ) சந்தோஷ் ஹாதிமணி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பா்ட் ஜான் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இச்சம்பவம் தொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

மதுக்கடையை அகற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தோப்பூா் மக்கள் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அருகே உள்ள தோப்பூா் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் த... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே விவசாயி தற்கொலை

தட்டாா்மடம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். தட்டாா்மடம் அருகே உள்ள புத்தன்தருவை கஸ்பா தெருவைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் பேச்சிமுத்து (2... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு பணியாளா்களுக்கு தொ... மேலும் பார்க்க

இலுப்பையூரணியில் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பை யூரணி ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த சில ஆண்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 18,852 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 18,852 மாணவா் - மாணவிகள் தோ்வு எழுதினா் என மாவட்டஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதித்து அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா். இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க