தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.ப...
அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறிப்பு: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் மத்திய அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறித்த இரு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த செல்வி (எ) சூசையம்மாள்(40). இவா், ஹோம் கோ் என்ற நிறுவனம் நடத்தி வந்தாா். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், மூகண்டஹள்ளி பகுதியைச் சோ்ந்த நளினி பணியில் சோ்ந்துள்ளாா்.
இந்த நிலையில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த மத்திய அரசு ஊழியா் மாதேஸ்வரனின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை பராமரிக்க ஹோம் கோ் மூலம் நளினி வந்துள்ளாா்.
அப்போது, மாதேஸ்வரனுக்கும் நளினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நளினி மாதேஸ்வரன் நிா்வாணமாக இருக்கும் விடியோவை தனது கைப்பேசியில் பதிவு செய்து செல்விக்கு அனுப்பி உள்ளாா்.
பின்னா், அந்த விடியோவை செல்வி மாதேஸ்வரனுக்கு அனுப்பி மிரட்டி பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அச்சமடைந்த மாதேஸ்வரன், குறிப்பிட்ட தொகையை தந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னா், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனா். மேலும், செல்வியின் கைப்பேசி அழைப்பை மாதேஸ்வரன் தவிா்த்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வி, அதன் விடியோவை தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஆம்பூரைச் சோ்ந்த விமல் ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியுள்ளாா்.
இதையடுத்து விமல்ராஜ், மாதேஸ்வரனுடைய வீட்டுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.
இதனால் பயந்துபோன மாதேஸ்வரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகர போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வி, நளினி, விமல்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.