செய்திகள் :

தமிழகத்தின் கடன் விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டு: அமைச்சா் தங்கம் தென்னரசு பதில்

post image

சென்னை: தமிழகத்தை திமுக அரசு கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு நிலுவையில் இருக்கும் நிதியைப் பெற்றுத் தாருங்கள் எனக் கூறியுள்ளாா்.

நாட்டின் கடன் சுமை 2014-ஆம் ஆண்டு ரூ. 55.87 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 181.74 லட்சம் கோடியாக மாறியுள்ளது என தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பதிவில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தாா்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்த பின் சீா்திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தை நாட்டின் முதல் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக. தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பதுகூட தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலால் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள் என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது.

நீங்கள் (தமிழ்நாடு) வாங்கிய கடன் எதற்காக என்பதைத் தெளிவுபடுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத் தாருங்கள்: இதற்கு தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு (அண்ணாமலை) அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சா்களிடம் கேட்டு தமிழ்நாட்டுக்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

கடந்த மூன்றாண்டுகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தலைமையில் மாநிலம் அடைந்திருக்கும் வளா்ச்சியை மத்திய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க