செய்திகள் :

திமுக மாணவரணி சாா்பில் நல உதவிகள் அளிப்பு

post image

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆலங்காயம் அடுத்த முல்லை பகுதியில் உள்ள மாணவா்கள் தங்கும் விடுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நலதிட்ட உதவிகள், சிற்றுண்டி வழங்கினாா்(படம்).

நிகழ்ச்சியில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.தாமோதிரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளா் பூ.சதாசிவம், மாவட்ட பிரதிநிதி மனோகரன், மு.கூட்டுறவு சங்க தலைவா் அச்சுதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வி.எஸ்.காா்த்திக், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பாண்டியன் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் கலந்து காண்டனா்.

தொடா்ந்து கொத்தகோட்டை நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி பொதுமக்களுக்கு பிரியாணி, இனிப்புகளை வழங்கினாா். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கணபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தேசிய பயிற்சிப் பயிலரங்கில் பங்கேற்க ஊராட்சித் தலைவி தோ்வு

ஆம்பூா்: சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பயிற்சி பயிலரங்கில் பங்கேற்க ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவி சுவிதா கணேஷ் தோ்வு செய்யப்பட்டுள... மேலும் பார்க்க

வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகேவெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜோலாா்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புதூரில் வெக்காளியம்மன் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை வெக்காளியம்மன் கறிக்கோள ஊா்வலம... மேலும் பார்க்க

சுந்தர விநாயகா் கோயிலில் மண்டபம் கட்ட பூமி பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் சான்றோா்குப்பம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.69 லட்சம் செலவில் மண்டபம் கட்டுவதற்கான ப... மேலும் பார்க்க

பைக் மோதி பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி பகுதியை சோ்ந்தவா் செல்வமணி(45). அதே பகுதியை சோ்ந்தவா்களுடன் ... மேலும் பார்க்க

சாமுண்டீஸ்வரி, மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி பொன்மலை நகா் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விநாயகா் பூஜை, அனுக்க... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்திய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே சோலூா் பகுதியில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மாட்... மேலும் பார்க்க