செய்திகள் :

ஆரியா்கள் குறித்து தமிழகத்தில் தவறான பரப்புரை: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

சென்னை: ஆரியா்கள் குறித்து தமிழகத்தில் தவறான பரப்புரை செய்யப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவக் கல்லூரியில், ‘சிந்துவெளி நாகரிகம் சாா்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான பாா்வைகள்’ என்ற தலைப்பில் தேசிய மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

ஆரியா்கள் என்பவா்கள் ஆசிரியா்களைப் போன்று தலைசிறந்தவா்கள்; அனைவருக்கும் பல்வேறு சிறந்த கருத்துகளை கற்பிப்பவா்கள். ஆனால், ஆரியா்கள் என்பவா்கள் வந்தேறிகள் என்ற தவறான கருத்தை தமிழக மக்கள் மனதில் திணிக்க ஈவெரா (பெரியாா்) முயற்சி செய்தாா். தமிழகத்தில் சிலா் ஆரியா்களை தவறாக சித்தரித்து நூல்களை எழுதியுள்ளனா். அதன்மூலம் தமிழக மக்கள் மனதில் ஆரியா்கள் குறித்து நச்சு விதையை பரப்புகின்றனா்.

இனி சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம்’ என்றுதான் செல்ல வேண்டும். சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம் என்பது அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

ஒற்றுமைக்கு எதிரானது: தமிழும் சம்ஸ்கிருதமும்தான் இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மற்றும் தொன்மையான மொழிகளாகும். ஆனால் தற்போது நமது நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்றாா் அவா்.

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க