செய்திகள் :

வனச் சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளா் மரணம்

post image

குலசேகரம் அருகே வனச் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது இறந்து கிடந்த வனக் காப்பாளா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

பேச்சிப்பாறை அருகே மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பை சோ்ந்தவா் செல்லப்பன்(57). வனக்காப்பாளரான இவா், காவல் ஸ்தலத்திலுள்ள சோதனை சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை சோதனை சாவடிக்கு மாற்று பணிக்குச் சென்ற வனக் காப்பாளா் சுஜின் வந்து பாா்த்தபோது, செல்லப்பன் சோதனை சாவடி கட்டடத்தில், உள் அறையில் இறந்து கிடந்துள்ளாா். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு சுஜினஅ தகவல் கொடுத்துள்ளாா்.

வனத்துறையினரும், குலசேகரம் போலீஸாரும் வந்து செல்லப்பனின் சடலத்தை மீட்டு, குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊழியா் மீது தாக்குதல்: குழித்துறை நகராட்சி பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

குழித்துறை நகராட்சி ஊழியா் தாக்கப்பட்டதை கண்டித்து நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்குப் பின் இப் பிரச்னைக்கு தீா்வு எட்டப்பட்டது. க... மேலும் பார்க்க

கேரளபுரம் ஸ்ரீஅதிசய விநாயகா், மகாதேவா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

தக்கலை அருகே கேரளபுரம் ஸ்ரீஅதிசய விநாயகா் மற்றும் மகாதேவா் திருக்கோயில் மாசித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், திருக்கொடியேற்றம், கலச ... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திங்கள்கிழமை தங்க மோதிரம் வழங்கினாா் குமரி கிழக்கு மாவட்ட தி... மேலும் பார்க்க

சாம்பல் புதன்: தேவாலயங்களில் நாளை சிறப்பு திருப்பலி

கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் மாா்ச் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறும். முளகுமூடு தூய மரியன்னை பசிலி... மேலும் பார்க்க

ஆட்சியரின் பெயரில் போலி கையொப்பமிட்டு பள்ளிகளில் பணம் வசூல்: போலீஸாா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கையொப்பமிட்டு பள்ளிகளில் பணம் வசூலித்து மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட செய்... மேலும் பார்க்க

நாகா்கோவில்: ரூ.14.75 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.14.75 லட்சத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். மாநகராட்சி 12 ஆவது வாா்டு வடசேரி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ... மேலும் பார்க்க