செய்திகள் :

ஸ்கைப் சேவை நிறுத்தம்! பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்திய வசதி!

post image

ஸ்கைப் இணையதளப் பக்கம் மே 5ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கு மாற்றாக புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டீம்ஸ் என்ற செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. டீம்ஸ் செயலி ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தாலும், பல்வேறு புதிய அம்சங்களுடன் ஸ்கைப்புக்கு மாற்றாக கொண்டுவரப்படவுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளுக் ஒன்று ஸ்கைப் செயலி. கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கைப் செயலி, பாதுகாக்கப்பட்ட விடியோ அழைப்புகளுக்கு புகழ்பெற்றது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இச்செயலி, தொழில் நிறுவனங்கள் முதல் தனிநபர்கள் வரை என 66 கோடி பயனர்களைக் கொண்டிருந்தது. விடியோ அழைப்பு வழங்கும் செயலிகளில் 2010ஆம் ஆண்டில் அதிகபட்ச பயனர்களைக் கொண்ட செயலியாக ஸ்கைப் இருந்தது.

இந்நிலையில் ஸ்கைப் செயலி மே 5ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்காது என மைக்ரோசாஃப் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸ் செயலியை மைக்ரோசாஃப் மேம்படுத்தியுள்ளது.

தற்போது ஸ்கைப் செயலியைப் பயன்படுத்திவரும் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் மூலம் எந்தவித உள்நுழைவும் இல்லாமல் டீம்ஸ் செயலியில் உள் நுழையலாம். டீம்ஸ் செயலிக்கு புதிதாக உள்நுழைவுக் குறியீடுகளை, கடவுச் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் ஸ்கைப் செயலியில் உள்ள தொடர்புகள், அழைப்புகளின் வரலாறு போன்ர தரவுகளை டீம்ஸ் செயலிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியையும் மைக்ரோசாஃப்ட் கொடுத்துள்ளது.

இதையும் படிக்க | ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34

ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (மார்ச் 3) 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) 19 காசுகள் சரிந்து ரூ. 87.37 காசுகளாக இர... மேலும் பார்க்க

பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (மார்ச் 3) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 112 புள்ளிகளும் நிஃப்டி பெரிய மாற்றங்களின்றி 5 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. மேலும் பார்க்க

பங்குச் சந்தை: எழுச்சிக்குப் பிறகு வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை எழுச்சியுடன் தொடங்கிய நிலையில், தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறுவதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந... மேலும் பார்க்க

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ​​8.25% ஆக நிர்ணயம்!

புதுதில்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024-25 நிதியாண்டுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக நிர்ணயம். பிப்ரவரி 2024ல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ம... மேலும் பார்க்க

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி இந்தியாவில் அறிமுகம்!

ஹைதராபாத்: சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி எம் தொடரின் இந்த சமீபத்திய வடிவமைப்புகள், சக்திவாய... மேலும் பார்க்க

கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

புதுதில்லி: 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115... மேலும் பார்க்க