செய்திகள் :

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ​​8.25% ஆக நிர்ணயம்!

post image

புதுதில்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024-25 நிதியாண்டுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக நிர்ணயம். பிப்ரவரி 2024ல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மீதான வட்டி விகிதம் 2023-24 ஆம் ஆண்டு 8.25 சதவிகிதமாக உயர்த்தியது. இது 2022-23ல் 8.15 சதவிகிதமாக இருந்தது.

மார்ச் 2022ல், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது 2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை அதன் ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக 8.1 சதவிகிதமாகக் குறைத்தது. 2020-21ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் மீதான 8.10 சதவிகித வட்டி விகிதம் 1977-78 க்குப் பிறகு இது மிகக் குறைவானது. அப்போது ஈபிஎஃப் வட்டி விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது.

2020-21 ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் வைப்புத்தொகைக்கு 8.5 சதவிகித வட்டி விகிதத்தை மத்திய அறங்காவலர் குழு ஆனது மார்ச் 2021ல் முடிவு செய்தது. அரசு ஒப்புதலுக்குப் பிறகு, 2024-25ஆம் ஆண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைத்தது.

மார்ச் 2020ல், வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதம் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.5 சதவிகிதமாகவும், இது 2018-19 க்கு வழங்கப்பட்ட 8.65 சதவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டது. இபிஎஃப்ஓ தனது சந்தாதாரர்களுக்கு 2016-17ஆம் ஆண்டில் 8.65 சதவிகித வட்டியும், 2017-18ஆம் ஆண்டில் 8.55 சதவிகித வட்டியும் வழங்கியுள்ளது.

2015-16 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.8 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் 8.75 சதவிகித வட்டி விகிதத்தை வழங்கியது. இது 2012-13ஆம் ஆண்டிற்கான 8.5 சதவிகிதத்தை விட அதிகமாகும். 2011-12ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.25 சதவிகிதமாக இருந்தது.

இதையும் படிக்க: ஆந்திரத்தில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி இந்தியாவில் அறிமுகம்!

ஹைதராபாத்: சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி எம் தொடரின் இந்த சமீபத்திய வடிவமைப்புகள், சக்திவாய... மேலும் பார்க்க

கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

புதுதில்லி: 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115... மேலும் பார்க்க

கிளை நிறுவனத்தை மூடிய பிளிப்கார்ட், ஊழியர்கள் பணிநீக்கம்!

புதுதில்லி: இ-காமர்ஸ் நிறுவனமான, 'பிளிப்கார்ட்' அதன் கிளை நிறுவனமான ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை மூடுவதுடன், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது.2017ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தங்கள் த... மேலும் பார்க்க

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னேற்றம்

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 4.6 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், ... மேலும் பார்க்க

நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பு!

புதுதில்லி: ரயில்-கடல்-ரயில் பாதை வழியாக கொண்டு சென்ற நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாகி 54 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.பல்வேறு மின் உற்பத்தி நிலை... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு $640.479 ஆக உயர்வு!

மும்பை: பிப்ரவரி 21ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.758 பில்லியன் டாலர் அதிகரித்து 640.479 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்... மேலும் பார்க்க