செய்திகள் :

கிளை நிறுவனத்தை மூடிய பிளிப்கார்ட், ஊழியர்கள் பணிநீக்கம்!

post image

புதுதில்லி: இ-காமர்ஸ் நிறுவனமான, 'பிளிப்கார்ட்' அதன் கிளை நிறுவனமான ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை மூடுவதுடன், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது.

2017ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்க விரும்பும் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தல் கருவிகள், கிடங்கு உள்ளிட்ட அனைத்து ஆதரவையும் வழங்கி வந்தது. இதை 2022ல் பிளிப்கார்ட் கையகப்படுத்தியது. இது குறித்து நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, இந்த தகவலை உறுதி செய்த பிளிப்கார்ட்.

அதி கவனமாக பரிசீலித்த பிறகு, 2022ஆம் ஆண்டில் பிளிப்கார்ட் கையகப்படுத்திய ஏஎன்எஸ் காமர்ஸ் மற்றும் அதன் செயல்பாடுகளை மூட முடிவு செய்தது.

நாங்கள் செயல்பாடுகளை நிறுத்தும் போது, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த மாற்றத்தின் போது ஊழியர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைக்க, பிளிப்கார்ட்டில் உள் வாய்ப்புகள், அவுட்பிளேஸ்மென்ட் சேவைகள் வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றது நிறுவனம்.

2022ஆம் நிதியாண்டின் இறுதியில் ஏஎன்எஸ் காமர்ஸில் 600 ஊழியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்க: ஹீரோ மோட்டோகாா்ப் நிகர லாபம் 2% உயா்வு

கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

புதுதில்லி: 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115... மேலும் பார்க்க

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னேற்றம்

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 4.6 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், ... மேலும் பார்க்க

நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பு!

புதுதில்லி: ரயில்-கடல்-ரயில் பாதை வழியாக கொண்டு சென்ற நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாகி 54 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.பல்வேறு மின் உற்பத்தி நிலை... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு $640.479 ஆக உயர்வு!

மும்பை: பிப்ரவரி 21ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.758 பில்லியன் டாலர் அதிகரித்து 640.479 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கினால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக குறைத்து, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 28 காசுகள் குறைந்து ரூ.87... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: துடைத்தெறியப்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.7.46 லட்சம் கோடி!

புதுதில்லி: இன்றைய காலை நேர வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.46 லட்சம் கோடி அளவுக்கு துடைத்தெறியப்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,414.33 புள்ளிகள் சரிந்தது மு... மேலும் பார்க்க