செய்திகள் :

15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது: தில்லி அமைச்சர்

post image

15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் பெட்ரோல் வழங்குவதை நிறுத்தப்படவுள்ளதாக தில்லி சுற்றுசூழல் நலத் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அதிகாரிகளுடன் உடனான கூட்டத்தில் பங்கேற்றப் பின் பேசிய அமைச்சர் சிர்ஷா, வாகன மாசுபாட்டை கட்டுப்படுத்த தில்லி அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பழைய வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது, புகை எதிர்ப்பு நடவடிக்கைகள், மின்சார வாகனங்களுக்கு மாறுதல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

”பெட்ரோல் நிலையங்களில் நவீன கருவிகளை நிருவி 15 ஆண்டுகளுக்கும் மேல் இயக்கப்படும் பழைய வாகனங்களைக் கண்டறிந்து, அவ்வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்தவுள்ளோம்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மணிப்பூர் மக்கள் சுதந்திரம்.. பாதுகாப்புப் படைக்கு அமித் ஷா உத்தரவு!

இந்த முடிவு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதுடன், காற்று மாசு அளவைக் குறைக்க தேசிய தலைநகரில் உள்ள உயரமான கட்டடங்கள் மற்றும் ஹோட்டல்களில் தண்ணீரைப் பயன்படுத்தி காற்று மாசைக் குறைக்கும் இயந்திரத்தை நிறுவ வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

தில்லியில் பொது போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் 90 சதவிகித சிஎன்ஜி பேருந்துகள் வரும் டிசம்பர் 2025-க்குள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, மின்சாரப் பேருந்துகளாக மாற்றப்படும் என்று அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா தெரிவித்தார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியா் கைது

தெற்கு தில்லியின் சி.ஆா். பாா்க் பகுதியில் 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெ... மேலும் பார்க்க

‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை: அமைச்சா் பா்வேஷ் உறுதி

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தைப் புதுப்பிப்பதில் அரசுப் பணம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய ‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று தில்லி அமை... மேலும் பார்க்க

பாஜக தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் புறக்கணிப்பு: ஆம் ஆத்மி ஆட்சி மீது விசாரணை நடத்த அமைச்சா் உறுதி

நமது சிறப்பு நிருபா் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினா்கள் தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது குறித்து விசாரணை நடத்தப்படும் என தில்லி அரசின் பொது... மேலும் பார்க்க

பொதுக் கணக்குக் குழு ஆய்வில் சிஏஜி அறிக்கை: பேரவைத் தலைவா் அறிவிப்பு

தில்லி மதுபானக் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிற்கு (பிஏசி) ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படு... மேலும் பார்க்க

நஜாஃப்கரை நஹா்கா் என மறுபெயரிட பாஜக எம்எல்ஏ முன்மொழிவு

தென்மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கரின் அசல் பெயரை முகலாயா்கள் மாற்றியதாகக் கூறி, பாஜக எம்எல்ஏ நீலம் பஹல்வான் வியாழக்கிழமை ’நஹா்கா்’ என மறுபெயரிட முன்மொழிந்தாா். நஜஃப்கரில் இருந்து சமீபத்தில் நடந்த சட... மேலும் பார்க்க

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் வெளியே தா்ணாவில் ஈடுபட்டனா். சட்டப்பேரவையில் ச... மேலும் பார்க்க