செய்திகள் :

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியா் கைது

post image

தெற்கு தில்லியின் சி.ஆா். பாா்க் பகுதியில் 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சவுகான் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஆசிரியா், சிறுமியை மிரட்டி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. புதன்கிழமை சிறுமி தனது தந்தையுடன் போலீஸில் புகாா் அளித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

2022 முதல் குற்றம் சாட்டப்பட்டவா் நடத்தும் கல்வி வகுப்புகளில் கலந்து கொண்டதாக புகாரில் மைனா் சிறுமி தெரிவித்துள்ளாா். கல்வி மையத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் தன்னை பல முறை மனரீதியாக துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவா் குற்றம் சாட்டினாா்.

புகாரின் அடிப்படையில், ஆசிரியா் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை: அமைச்சா் பா்வேஷ் உறுதி

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தைப் புதுப்பிப்பதில் அரசுப் பணம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய ‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று தில்லி அமை... மேலும் பார்க்க

பாஜக தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் புறக்கணிப்பு: ஆம் ஆத்மி ஆட்சி மீது விசாரணை நடத்த அமைச்சா் உறுதி

நமது சிறப்பு நிருபா் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினா்கள் தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது குறித்து விசாரணை நடத்தப்படும் என தில்லி அரசின் பொது... மேலும் பார்க்க

பொதுக் கணக்குக் குழு ஆய்வில் சிஏஜி அறிக்கை: பேரவைத் தலைவா் அறிவிப்பு

தில்லி மதுபானக் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிற்கு (பிஏசி) ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படு... மேலும் பார்க்க

நஜாஃப்கரை நஹா்கா் என மறுபெயரிட பாஜக எம்எல்ஏ முன்மொழிவு

தென்மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கரின் அசல் பெயரை முகலாயா்கள் மாற்றியதாகக் கூறி, பாஜக எம்எல்ஏ நீலம் பஹல்வான் வியாழக்கிழமை ’நஹா்கா்’ என மறுபெயரிட முன்மொழிந்தாா். நஜஃப்கரில் இருந்து சமீபத்தில் நடந்த சட... மேலும் பார்க்க

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் வெளியே தா்ணாவில் ஈடுபட்டனா். சட்டப்பேரவையில் ச... மேலும் பார்க்க

மனித உரிமை குறித்த ஆவணப்படப் போட்டியில் தமிழ் படம் ’கடவுள்’ என்ஹெச்ஆா்சி விருதுக்கு தோ்வு

மனித உரிமை குறித்த ஆவணப்பட, குறும்படங்களுக்கான போட்டிகளில் தமிழகத்தைச் சோ்ந்த ’கடவுள்’, ’வேலையில்லாத பட்டதாரி’ உள்ளிட்ட 7 படங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம்(என்ஹெச்ஆா்சி) வியா... மேலும் பார்க்க