செய்திகள் :

மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கைதான்: அமைச்சர் சேகர்பாபு

post image

நாங்கள் மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை பிராட்வே பகுதியில் போதை இல்லா தமிழகம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி கவன ஈர்ப்பு நிகழ்ச்சியை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா இணைந்து தொடக்கிவைத்தனர்.

இதில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சேகர்பாபு,

"முதல்வர் உயிர் பிரச்னையான மொழிப்போரையும் உரிமை பிரச்னைக்கான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ள சூழலில் இவற்றை மக்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க | ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்

அவர் கூறியுள்ள இந்த இரண்டில் மொழி பிரச்னை எங்களின் உயிர் பிரச்னை என்கிறார். ஆகவே, நாங்கள் மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம். இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களுக்கு இந்த மொழியை பற்றி தெரிகின்றதைவிட, ஏதோ பதவிக்காக இந்த மாநிலத்தின் உரிமைகளைப் பற்றி அறியாதவர் பிதற்றுகின்ற பிதற்றலுக்கெல்லாம் பதில் கூறுகின்ற நிலைமையில் நாங்கள் இல்லை.

ஹிந்தியை திணிக்க முயற்சி செய்பவர்களுக்கு 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். இதுபோன்று பேசிவரும் ஆளுநர் ரவி போன்றவர்கள் 2026க்குப் பிறகு இங்கு இருக்கமாட்டார்கள்" என்றார்.

மேலும், 'அதிமுக ஆட்சிக் காலத்தில் என் மீது எந்த வழக்கும் போட்டதில்லை. திமுக ஆட்சி வந்த பிறகுதான் இது போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறேன்' என சீமான் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர், 'திமுக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி, சாத்தான்களின் ஆட்சி அல்ல. சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று கூறினார்.

இதையும் படிக்க | பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! ரூ. 6 லட்சம் கோடி இழப்பு!!

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து விமானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில்... மேலும் பார்க்க

நிதிப் பகிர்வைக் குறைக்கும் மத்திய அரசு? ராமதாஸ் கண்டனம்!

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வினை 41 சதவிகிதத்திலிருந... மேலும் பார்க்க

'கலெக்டர், எஸ்.பி. நான் சொல்றததான் கேட்கணும்' - தருமபுரி திமுக மாவட்டப் பொறுப்பாளர் பேச்சு

மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி ... மேலும் பார்க்க

ஆளுநர் தமிழர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியி... மேலும் பார்க்க

திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல்... இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக தர்மபுரி ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்: திரும்பப்பெறப்படும் குழு பயணச்சீட்டுக்கான தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயிலில் வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டுக்கான தள்ளுபடிக் கட்டணம் மார்ச் 1 ஆம் தேதி முதல் திரும்பப் பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ... மேலும் பார்க்க