செய்திகள் :

பிகாரின் அடுத்த முதல்வரை மக்கள் முடிவு செய்வர்: ராப்ரி தேவி

post image

தேஜஸ்வி பிகாரின் அடுத்த முதல்வரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அவரின் தாயாரும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேஜஸ்வி யாதவ் அடுத்த முதல்வராக வருவாரா இல்லையா என்பது மக்கள் கையில்தான் உள்ளது. தலைவர்கள் கையில் கிடையாது. தேஜக கூட்டணியினர்தான் ஒவ்வொரு குற்றத்தையும் செய்கிறார்கள்.

நாங்கள் பயப்படவில்லை, நாங்கள் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்கும் ஓடவில்லை, நாங்கள் நிரபராதிகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இன்று தேஜஸ்வி யாதவ், பிகாரின் அமைச்சரவை விரிவாக்கத்தை கடுமையாக விமர்சித்தார். பிகார் மக்கள் மாநிலத்தில் காலாவதியான அரசை விரும்பவில்லை.

கணவரை விவாகரத்து செய்த வாரிசு பட நடிகை!

புதிய வாகனத்தை(அரசை) விரும்புகிறார்கள் என்று கூறினார். ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத், அவரின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், மகள் ஹேமா யாதவ் ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியது.

ஏற்கெனவே, மாட்டுத் தீவின ஊழல் வழக்குகள் சிலவற்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த லாலு, இப்போது உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் வெளியே உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டின் (2024 -25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்... மேலும் பார்க்க

உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ்... மேலும் பார்க்க

ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின்... மேலும் பார்க்க

கோவா வரும் சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு இட்லி, சாம்பார் தான் காரணம்!

நமது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு இட்லி, சாம்பார், வடா பாவ் மற்றும் உக்ரைன் போர்தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க