செய்திகள் :

ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

post image

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ் சர்மா (30). ஐடி ஊழியரான இவர் நிகிதா சர்மா என்ற பெண்ணை ஜனவரி 30, 2024 அன்று திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்தவுடன் மானவ் தனது மனைவியுடன் மும்பை சென்று வசித்தார். ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது. சில மாதங்களில் மானவுக்கும் நிகிதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. வாக்குவாதத்தில் மானவ் குடும்பத்தினர் மீது பொய்வழக்குப் போடவிருப்பதாக நிகிதா கூறியுள்ளார். மேலும், மானவ்வை பிரிந்துசென்று தனது காதலனுடன் வாழ்விருப்பதாகவும் நிகிதா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப். 23 அன்று இருவரும் ஆக்ரா சென்றுள்ளனர். அங்கு நிகிதாவின் வீட்டிற்கு சென்றபோது மானவ் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விரக்தி மனநிலையில் தனது வீட்டிற்கு வந்த மானவ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்கான காரணத்தை நேரலையில் பதிவுசெய்த அவர், பிப். 24 அன்று காலை 5 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதையும் படிக்க | பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

மானவ் பதிவு செய்த நேரலையில் அவரது மனைவி நிகிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ”தனிமையில் இருக்கும் ஆண்களைக் குறித்து நினைத்துப் பார், என் இறப்பிற்கு பின் யாரும் எனது பெற்றோரைத் தொடாதே” என்று தெரிவித்துள்ளார்.

6.57 நிமிடங்கள் கொண்ட அந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, நிகிதா ஷர்மா தனது கணவரின் விடியோவுக்கு மறுப்புத் தெரிவித்து விடியோ வெளியிட்டார். அதில், ”மானவ் குறிப்பிட்டிருப்பது எனது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றியே. அதுகுறித்து அவருக்குத் தெரியவந்தபோது அவர் என்னை மிகவும் திட்டினார். என்னிடம் மோசமாக நடந்துகொண்டார். அவர் அதிகமாக மது அருந்துவார். அதுமட்டுமின்றி இதற்கு முனரும் பலமுறை அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். நான் அதை மூன்று முறை தடுத்து நிறுத்தியுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க | சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

மேலும், மானவ் தற்கொலை செய்துகொண்ட நாளில் நிகிதா மானவ்வின் சகோதரியிடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால், அதனை கண்டுகொள்ள வேண்டாம் என்று அவர் கூறிய நிலையில், மானவ்வின் தந்தைக்கு அழைத்துள்ளார். அவர் அழைப்பை ஏற்கவில்லை என்று நிகிதா விடியோவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற இந்திய விமானப் படை அதிகாரியான மானவ்வின் தந்தை நரேந்திர சர்மா அளித்த புகாரின் பேரில் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் தளத்திலும் இந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளார்.

மானவ் உடலின் பிரேத பரிசோதனை பிப். 24 அன்று நடைபெற்றது. ஆனால், அப்போது எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

இருவரின் வாக்குமூலங்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டின் (2024 -25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்... மேலும் பார்க்க

உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின்... மேலும் பார்க்க

கோவா வரும் சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு இட்லி, சாம்பார் தான் காரணம்!

நமது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு இட்லி, சாம்பார், வடா பாவ் மற்றும் உக்ரைன் போர்தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்... மேலும் பார்க்க