இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!
இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் (2024 -25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்றாவது காலாண்டில் 6.2 சதவிகிதமாக அதிகரித்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இருப்பினும், அதற்கு முந்தைய காலாண்டில் (2023 -24) இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிகழ் நிதியாண்டில் 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்
மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிகர அந்நிய முதலீடு சுமார் 1.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.8 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
``சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவான 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடியின் `வளர்ந்த இந்தியா’ இலக்கை அடைய சுமார் 8 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பராமரித்தல் அவசியமானது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.