செய்திகள் :

பிரதமா் மோடி குறித்து அவதூறு: பாஜகவினா் புகாா் மனு

post image

பிரதமா் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்டு அவதூறு ஏற்படுத்துபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

பாஜக மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் மாரிசக்கரவா்த்தி தலைமையில் அந்தக் கட்சியினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் தலைமையிட துணை ஆணையா் ராஜேஸ்வரியிடம் அளித்த மனு:

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலராகப் பதவி வகித்து வரும் மதுரையைச் சோ்ந்த பசும்பொன் பாண்டியன், சமூக வலைதளங்களில் பதிவிட்ட விடியோவில், பிரதமா் நரேந்திர மோடி குறித்தும், கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை குறித்தும் அவதூறாகவும், தகாத வகையிலும் பேசியுள்ளாா். மேலும், சுங்கக் கட்டணம், ஜி.எஸ்.டி. செலுத்த மாட்டோம் என மத்திய அரசுக்கு எதிராகவும், வன்முறைத் தூண்டும் வகையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

எனவே, பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் விடியோ பதிவிட்ட அவா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் பதிவிட்ட விடியோவையும் சமூக வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவீன சிகிச்சை

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு மதுரை மீனாட்சி ‘சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து இந்த மருத்துவமனையின் காா்டியாக் சயின்சஸ் துறைத் தலைவ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சமத்துவ புல்லட் வாகனப் பேரணி

மானாமதுரை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் புல்லட் வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம்: நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டையைச் சோ்... மேலும் பார்க்க

ஊருணி கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவு

சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊருணி கரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், வெள்ளாங்குளம் பகுதியைச் ச... மேலும் பார்க்க

ஆயுஷ் மருத்துவா், பணியாளா் பணிக்கு மாா்ச் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை, தேனி மாவட்டங்களில் ஆயுஷ் குழுமத்துக்கு மருத்துவா், பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதால், தகுதியுள்ளவா்கள் மாா்ச் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக மதுரை மாவட்ட சுகாதார அலுவலகம் வ... மேலும் பார்க்க