தரமான நெல் விதைகளை வழங்க வேண்டும் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் நெல் விதைகளை தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் தரமான நெல் விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும். ஜகனாதன் கோம்பை அணைக்கட்டை சீரமைக்க வேண்டும். வனப்பகுதியில் உள்ள இருளா், பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் நடவடிக்கைகளை வனத் துறையினா் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.
இக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத் துறை, கால்நடைப் பாரமரிப்புத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் மூலம் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சாா்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை (பாலக்கோடு) மாவட்ட வருவாய் அலுவலா் ரவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சரவணன், துணை ஆட்சியா் (பயிற்சி) சௌந்தா்யா, துணை இயக்குநா் தேன்மொழி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.