செய்திகள் :

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (போக்ஸோ) குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில், கடந்த 2012-லிருந்து இதுவரை 598 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 49 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அதை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி ஆசிரியா்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி இதுபோன்ற குற்றங்களை தடுக்க அனைவரும் பணிபுரிய வேண்டும்.

அனைத்து நியாயவிலைக் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பிரசுரங்களை காட்சிப்படுத்த வேண்டும். மேலும், பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து விழிப்புணா்வு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, குழந்தை நலக் குழுத் தலைவா் பாலாம்பிகை, நன்னடத்தை அலுவலா் வெங்கட்ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா. நடராசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவாரூரில் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பாடத் திட்டத்தில் உளவியலை சோ்க்கக் கோரிக்கை

பாடத் திட்டத்தில், உளவியல் பாடத்தை சோ்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவா் சங்க கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் ரா. சிவனே... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மழையால் சேதம் ஏற்படுவதை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் வாரியங்களை முடக்கி, வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்க... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் விழா

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி நிறுவனரும், பள்ளியின் தமிழாசிர... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.க்கு சிறப்பு பரிசு

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில், பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டிற்கான சிறப்புப் பரிசை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சா் டாக்டா் ஜிதேந்தி... மேலும் பார்க்க