செய்திகள் :

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல: சீமான்

post image

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

தருமபுரியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பயணத்தில் இருக்கிறேன். இந்த நிலையில் காவல் துறையினா் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ஆஜராகுமாறு என்னிடம் அழைப்பாணை வழங்கியுள்ளனா். எனக்கு நேரம் இருக்கும்போதுதான் விசாரணைக்கு செல்ல இயலும். அதற்குள் எனது வீட்டின் நுழைவாயிலில் அழைப்பாணை ஒட்டப்பட்டது. வீட்டில் ஆள்கள் இருக்கும்போது கதவில் அழைப்பாணை ஏன் ஒட்டப்பட்டது. ஏற்கெனவே இந்த வழக்கில் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரத்தில் இருப்பதால்தான் இதுபோன்று காவல் துறையினா், ஆட்சியாளா்கள் செயல்படுகின்றனா். அதிகாரம் என்பது யாருக்கும் நிலையானதல்ல. என் தொடா்புடைய வழக்கில் மட்டும் காவல்துறை இவ்வளவு தீவிரம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை.

கருத்தியலாக என்னிடம் போட்டியிட இயலாதவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். பெரியாா் குறித்து நான் விமா்சிக்கவில்லை. அதேவேளையில் பெரியாா் மட்டும்தான் அனைத்தும் செய்ததுபோல பேசக் கூடாது. தமிழ் மொழியை மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். மொழி அழிந்தால் இனம், கலை, பண்பாடு ஆகியவையும் அழியும். ஆகவே தாய் மொழியில் கல்வி என்பது நடைமுறையில் இருக்க வேண்டும்.

மும்மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். கல்வி என்பது மாநில உரிமை. அதனை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்ய வேண்டும். மொழி இறையாண்மையில் தலையீடு கூடாது என்றாா்.

சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பாப்பாரப்பட்டியில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் ... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதம்

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பென்னாகரத்தில் நீதிமன்றம் முன் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட... மேலும் பார்க்க

தரமான நெல் விதைகளை வழங்க வேண்டும் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நெல் விதைகளை தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். மேலும் பார்க்க

சூழல் சுற்றுலா சென்ற பள்ளி மாணவா்கள்

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சூழல் சுற்றுலா சென்றனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, மாணவா்கள... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு திறனாய்வுக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு பணித் திறனாய்வுக் கூட்டம் தருமபுரி செந்தில் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி கூட்டுற... மேலும் பார்க்க