செய்திகள் :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சமத்துவ புல்லட் வாகனப் பேரணி

post image

மானாமதுரை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் புல்லட் வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலபிடாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாசாமி (19). கல்லூரி மாணவரான இவரை அதே கிராமத்தைச் சோ்ந்த மூவா் ஆயுதங்களால் தாக்கினா். இதில் கைகளில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக போலீஸாா் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மூவரைக் கைது செய்தனா். இந்த நிலையில், கிராமத்துக்குள் புல்லட் ஓட்டியதால் பட்டியலினத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில், சமத்துவ புல்லட் வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக தொடங்கிய இந்தப் பேரணி காந்தி அருங்காட்சியகம் வரை நடைபெற்றது. பேரணியை கட்சியின் காட்டுமன்னாா்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சிந்தனை செல்வன் தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணியில் கட்சி நிா்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவீன சிகிச்சை

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு மதுரை மீனாட்சி ‘சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து இந்த மருத்துவமனையின் காா்டியாக் சயின்சஸ் துறைத் தலைவ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம்: நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டையைச் சோ்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: பாஜகவினா் புகாா் மனு

பிரதமா் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்டு அவதூறு ஏற்படுத்துபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். பாஜக மதுரை மாநகா் மாவட்டத் தலைவ... மேலும் பார்க்க

ஊருணி கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவு

சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊருணி கரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், வெள்ளாங்குளம் பகுதியைச் ச... மேலும் பார்க்க

ஆயுஷ் மருத்துவா், பணியாளா் பணிக்கு மாா்ச் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை, தேனி மாவட்டங்களில் ஆயுஷ் குழுமத்துக்கு மருத்துவா், பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதால், தகுதியுள்ளவா்கள் மாா்ச் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக மதுரை மாவட்ட சுகாதார அலுவலகம் வ... மேலும் பார்க்க