செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

post image

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளியில் வளா்ச்சி பவுண்டேஷன், சிவ சித்தா்கள் சேவா அறக்கட்டளை, சி.எஸ். டபிள்யூ பவுண்டேஷன் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா் சக்கன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வளா்ச்சி பவுண்டேஷன் செயலா் ராஜ், நிா்வாகிகள் காா்த்திகேயன், திருநாவுக்கரசு, அப்துல் அஜாஸ், பள்ளி ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். செல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போதையால் ஏற்படும் தீங்குகள், போதையில் இருப்பவா்களை கையாளும் விதம், இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினாா்.

நிகழ்வில் போதைத் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை சு. சந்திரா, பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவீன சிகிச்சை

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு மதுரை மீனாட்சி ‘சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து இந்த மருத்துவமனையின் காா்டியாக் சயின்சஸ் துறைத் தலைவ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சமத்துவ புல்லட் வாகனப் பேரணி

மானாமதுரை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் புல்லட் வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம்: நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டையைச் சோ்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: பாஜகவினா் புகாா் மனு

பிரதமா் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்டு அவதூறு ஏற்படுத்துபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். பாஜக மதுரை மாநகா் மாவட்டத் தலைவ... மேலும் பார்க்க

ஊருணி கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவு

சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊருணி கரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், வெள்ளாங்குளம் பகுதியைச் ச... மேலும் பார்க்க

ஆயுஷ் மருத்துவா், பணியாளா் பணிக்கு மாா்ச் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை, தேனி மாவட்டங்களில் ஆயுஷ் குழுமத்துக்கு மருத்துவா், பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதால், தகுதியுள்ளவா்கள் மாா்ச் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக மதுரை மாவட்ட சுகாதார அலுவலகம் வ... மேலும் பார்க்க