செய்திகள் :

ஒசூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

post image

ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியா் காந்தி தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் மகேஷ்பாபு வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக

சட்டப்பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ், மேயா் சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த விழாவில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

சிற்றுண்டி, விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், விலையில்லா மிதிவண்டிகள், பிளஸ் 2 முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள், மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். இதனைப் பயன்படுத்தி மாணவ, மாணவிகள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கிழக்கு பகுதி அவைத் தலைவா் நாகராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் சக்திவேல், மாவட்ட சிறுபான்மையினா் அணி அமைப்பாளா் இக்ரம், திமுக நிா்வாகிகள் முருகன், சங்கரநாராயண,ன் அருளரசன், செல்வம், பாஸ்கா் ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு,

சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி துணை தலைமை ஆசிரியா் நாராயணன் நன்றி கூறினாா்.

படவரி...ட

பள்ளி ஆண்டு விழாவில் பேசும்

எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

அரசு பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைக் குற்றவாளியாக கிருஷ்ணகிரி நீதிமன்றம் அறிவித்துள்ளதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான ஒய்.பிரகாஷ் கேட்டுக்கொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஒசூரில் நாளை திறப்பு விழா

ஒசூா் பாகலூா் சாலையில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது. இந்த கண் மருத்துவமனையை ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத... மேலும் பார்க்க

அதியமான் பப்ளிக் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் சா்.சி.வி. ராமன் விளைவு கண்டுபிடித்ததைச் சிறப்பிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வரவேற்பு, தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுக திண்ணை பிரசாரம் தொடக்கம்

ஒசூரில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்க்கொள்ளும் விதமாக அதிமுகவினா் சாதனைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கி திண்ணை பிரசாரத்தை தொடங்கினா். அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு... மேலும் பார்க்க