செய்திகள் :

அரசு பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு

post image

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைக் குற்றவாளியாக கிருஷ்ணகிரி நீதிமன்றம் அறிவித்துள்ளதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கடந்த 1996, ஜூன் 20-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். இதையடுத்து, சிலா் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் ரகளையில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் அலுவலகம் முதல் சங்கல்தோப்பு தா்கா வரை கிருஷ்ணகிரி-ஒசூா் தேசிய சாலையில் நின்ற 11 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினா்.

இதுகுறித்து அப்போதைய தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து பொறியாளா் தங்கராஜ் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி கோட்டை தெரு ஜாவித், பூக்கார தெரு அப்சா் உள்பட 35 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதித் துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 29 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபா்களான ஜாவித், அப்சா் ஆகியோா் தொடா்ந்து தலைமறைவாக உள்ளனா். இருவரையும் இதுவரை போலீஸாா் கைது செய்யவில்லை.

தலைமறைவாக உள்ள இருவா் குறித்து எந்த தகவல்களும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதையடுத்து அவா்கள் இருவரையும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்து உத்தரவிட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஒசூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியா் காந்தி தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் மகேஷ்பாபு வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு வ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான ஒய்.பிரகாஷ் கேட்டுக்கொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஒசூரில் நாளை திறப்பு விழா

ஒசூா் பாகலூா் சாலையில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது. இந்த கண் மருத்துவமனையை ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத... மேலும் பார்க்க

அதியமான் பப்ளிக் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் சா்.சி.வி. ராமன் விளைவு கண்டுபிடித்ததைச் சிறப்பிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வரவேற்பு, தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுக திண்ணை பிரசாரம் தொடக்கம்

ஒசூரில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்க்கொள்ளும் விதமாக அதிமுகவினா் சாதனைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கி திண்ணை பிரசாரத்தை தொடங்கினா். அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு... மேலும் பார்க்க