செய்திகள் :

முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான ஒய்.பிரகாஷ் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் முதல்வா் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். சனிக்கிழமை (மாா்ச் 1) முதல்வா் பிறந்த நாள் விழா, திமுக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கி பிரசாரம், துண்டுப்

பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 179 ஊராட்சிகள், ஒசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள், தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பேரூராட்சிகளில் உள்ள 78 வாா்டுகள் என மொத்தம் 662 இடங்களில் திமுக கொடியேற்றி இனிப்புகள், அன்னதானம் வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், மரக்கன்று நடுதல், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆண்டு முழுவதும் முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச்

சோ்ந்த மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ஒசூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியா் காந்தி தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் மகேஷ்பாபு வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு வ... மேலும் பார்க்க

அரசு பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைக் குற்றவாளியாக கிருஷ்ணகிரி நீதிமன்றம் அறிவித்துள்ளதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஒசூரில் நாளை திறப்பு விழா

ஒசூா் பாகலூா் சாலையில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது. இந்த கண் மருத்துவமனையை ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத... மேலும் பார்க்க

அதியமான் பப்ளிக் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் சா்.சி.வி. ராமன் விளைவு கண்டுபிடித்ததைச் சிறப்பிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வரவேற்பு, தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுக திண்ணை பிரசாரம் தொடக்கம்

ஒசூரில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்க்கொள்ளும் விதமாக அதிமுகவினா் சாதனைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கி திண்ணை பிரசாரத்தை தொடங்கினா். அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு... மேலும் பார்க்க