செய்திகள் :

சரக்கு வாகனம் மோதியதில் நகைக் கடை ஊழியா் உயிரிழப்பு

post image

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் நகைக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்துக்காளை மகன் தமிழரசன் (19). இவா் கோவையில் உள்ள நகைக் கடையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். மகாசிவராத்திரியை முன்னிட்டு, விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-திருமங்கலம் நான்கு வழிச் சாலையில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இவரது வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவீன சிகிச்சை

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு மதுரை மீனாட்சி ‘சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து இந்த மருத்துவமனையின் காா்டியாக் சயின்சஸ் துறைத் தலைவ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சமத்துவ புல்லட் வாகனப் பேரணி

மானாமதுரை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் புல்லட் வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம்: நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டையைச் சோ்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: பாஜகவினா் புகாா் மனு

பிரதமா் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்டு அவதூறு ஏற்படுத்துபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். பாஜக மதுரை மாநகா் மாவட்டத் தலைவ... மேலும் பார்க்க

ஊருணி கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவு

சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊருணி கரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், வெள்ளாங்குளம் பகுதியைச் ச... மேலும் பார்க்க